கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு பற்றாக்குறை!

Date:

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் கல்சியம் மற்றும் விற்றமின் ஆகிய மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக சிறுமிகளுக்கு வழங்கப்படும் HPV தடுப்பூசி ஒரு வருடமாக கிடைக்கவில்லை என தாய்மார்களினால் குறிப்பிடப்படுகிறது.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் வழங்கப்படும் கல்சியம் மற்றும் விட்டமின் மருந்துகள் பல மாதங்களாக கிடைக்காததன் காரணமாக வெளியில் இருந்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை என அரசு குடும்ப நலப் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பல மாவட்டங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசு குடும்ப நலப் பணியாளர் சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...