கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு பற்றாக்குறை!

Date:

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் கல்சியம் மற்றும் விற்றமின் ஆகிய மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக சிறுமிகளுக்கு வழங்கப்படும் HPV தடுப்பூசி ஒரு வருடமாக கிடைக்கவில்லை என தாய்மார்களினால் குறிப்பிடப்படுகிறது.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் வழங்கப்படும் கல்சியம் மற்றும் விட்டமின் மருந்துகள் பல மாதங்களாக கிடைக்காததன் காரணமாக வெளியில் இருந்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை என அரசு குடும்ப நலப் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பல மாவட்டங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசு குடும்ப நலப் பணியாளர் சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...