போதைப்பொருள் குற்றங்களை ஒடுக்குவதற்கு முன்னுரிமை; பதில் பொலிஸ்மா அதிபரின் முதல் அறிவிப்பு

Date:

தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்கும் முன்னுரிமை அளித்து செயல்பட உள்ளதாக புதிதாக நியமிக்கப்பட்ட பதில் பொலிஸ்மா அதிபர் (IGP) தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார்.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக (SDIG) கடமையாற்றிய தேஷபந்து தென்னகோன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, பதில் பொலிஸ் மா அதிபராக இன்று பதவி உயர்த்தப்பட்டார்.

இதன்படி, அவர் மூன்று மாதங்களுக்கு தற்காலிக பதில் பொலிஸ் மா அதிபராக பதவியில் இருப்பார்.

இந்நிலையில், தமது நியமனத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன்,

‘‘முதல் கட்டமாக தேசியப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதற்குத் தேவையான அனைத்து செயல்பாடுகளும் முன்னெடுக்கப்படும்.

அதேபோன்று நாட்டில் அதிகரித்துள்ள போதைப்பொருள் குற்றங்களை ஒடுக்குவதற்கும், ஒழுங்கப்பட்டு முன்னெடுக்கப்படும் குற்றங்களை தடுப்பதற்கும் முன்னுரிமையளிக்கப்படும்.‘‘ என்றார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...