க.பொ.த.சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: முதன்முறையாக பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் மிகக் குறுகிய காலத்தில் வெளியீடு!

Date:

இலங்கை பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (01) வெளியிடப்பட உள்ளன.

இதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரலாற்றில் முதன்முறையாக பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் மிகக் குறுகிய காலத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை பரீட்­சைகள் திணைக்களத்தினால் குறித்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டன.

இதன்படி, பரீட்­சை பெறு­பே­றுகளை www.doenets.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை கடந்த மே மாதம் 29 ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு நடத்தப்பட்டது.3,568 பரீட்சை நிலையங்களில் குறித்த பரீட்சை நடத்தப்பட்டது.இதற்கமைய, 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.

இதில், 3 இலட்சத்து 94,450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

இதனிடையே, பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...