க.பொ.த.சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: முதன்முறையாக பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் மிகக் குறுகிய காலத்தில் வெளியீடு!

Date:

இலங்கை பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (01) வெளியிடப்பட உள்ளன.

இதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரலாற்றில் முதன்முறையாக பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் மிகக் குறுகிய காலத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை பரீட்­சைகள் திணைக்களத்தினால் குறித்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டன.

இதன்படி, பரீட்­சை பெறு­பே­றுகளை www.doenets.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை கடந்த மே மாதம் 29 ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு நடத்தப்பட்டது.3,568 பரீட்சை நிலையங்களில் குறித்த பரீட்சை நடத்தப்பட்டது.இதற்கமைய, 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.

இதில், 3 இலட்சத்து 94,450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

இதனிடையே, பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...