ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன், மத்ரஸாவில் உயிரிழந்த சிறுவனின் ஜனாஸா நல்லடக்கம்

Date:

அம்பாறை – சாய்ந்தமருதில் உள்ள மத்ரஸா ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 13 வயது சிறுவனின் ஜனாஸா நேற்று(07) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிறுவனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதால், தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாய்ந்தமருதில் மத்ரஸா ஒன்றில் பயின்று வந்த காத்தான்குடியை சேர்ந்த 13 வயது சிறுவன், 5ஆம் திகதி மாலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார். சிறுவனின் உயிரிழப்பையடுத்து, பொதுமக்கள் மத்ரஸாவை சுற்றிவளைத்தனர்.

இதனால் மத்ரஸாவின் நிர்வாகியை பொலிஸார் அங்கிருந்து அழைத்துச்சென்று விசாரணைகளை ஆரம்பித்ததுடன், அவர் தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளார்.

சிறுவனின் பிரேதப் பரிசோதனை அம்பாறை பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டதையடுத்து, ஜனாஸா பெற்றோரிடம் நேற்று மாலை கையளிக்கப்பட்டது.

காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அதே பள்ளிவாசல் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...