ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன், மத்ரஸாவில் உயிரிழந்த சிறுவனின் ஜனாஸா நல்லடக்கம்

Date:

அம்பாறை – சாய்ந்தமருதில் உள்ள மத்ரஸா ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 13 வயது சிறுவனின் ஜனாஸா நேற்று(07) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிறுவனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதால், தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாய்ந்தமருதில் மத்ரஸா ஒன்றில் பயின்று வந்த காத்தான்குடியை சேர்ந்த 13 வயது சிறுவன், 5ஆம் திகதி மாலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார். சிறுவனின் உயிரிழப்பையடுத்து, பொதுமக்கள் மத்ரஸாவை சுற்றிவளைத்தனர்.

இதனால் மத்ரஸாவின் நிர்வாகியை பொலிஸார் அங்கிருந்து அழைத்துச்சென்று விசாரணைகளை ஆரம்பித்ததுடன், அவர் தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளார்.

சிறுவனின் பிரேதப் பரிசோதனை அம்பாறை பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டதையடுத்து, ஜனாஸா பெற்றோரிடம் நேற்று மாலை கையளிக்கப்பட்டது.

காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அதே பள்ளிவாசல் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...