காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமெரிக்க ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கை!

Date:

வவுனியா – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களுக்கு தீர்வு காண்பதில் முக்கிய பங்காற்றக்கூடிய சிறப்புத் தூதுவராக முன்னாள் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனை நியமிக்குமாறு அவர்கள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் பேச்சாளரினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிவது, எதிர்காலத்தில் இனப்படுகொலைகளைத் தடுப்பது, தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவைப் பெறுவது ஆகியவையே தங்களது முதன்மை நோக்கங்களாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழரல்லாத ஆட்சியாளர்களிடமிருந்து தமிழர்களை விடுவித்து அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கை அவசியமாகிறது என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொசோவா, பொஸ்னியா, கிழக்கு திமோர் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளைப் போன்று, வெற்றிகரமான வாக்கெடுப்புக்கள் மூலம், தமிழர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களுக்கு தீர்வு காண்பதில் சர்வதேச ஆதரவு முக்கியமானது என வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரியுள்ளனர்.

எனவே பொஸ்னியாவில் மோதல்களைத் தீர்ப்பதில் பயன்படுத்தப்பட்ட வெற்றிகரமான மாதிரியைப் பின்பற்றி, இலங்கைக்கான அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவராக ஹிலாரி கிளிண்டன் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...