வெலிகம பகுதியில் துப்பாக்கிச் சூடு!

Date:

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காலி வீதி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள மீன் விற்பனை நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவர் வலான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் 42 மற்றும் 52 வயதுடைய தெனிப்பிட்டிய மற்றும் வெலிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற மீன் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் எனவும், மற்றையவர் அதே மீன் விற்பனை நிலையத்தில் பணிபுரிபவர் எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...