பதில் பொலிஸ்மா அதிபர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது: சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

Date:

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டமை குறித்து இலங்கை சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரை சித்திரவதை செய்ததாக உயர் நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில், தேசபந்து தென்னகோனை பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை எவ்வாறு அனுமதி வழங்கியது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் உபுல் ஜயசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான சில வழக்குகள் நிலுவையில் இருப்பதன் காரணமாக, அவர் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எந்த அடிப்படையில், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு அரசியலமைப்பு பேரவையினால் அவர் பதில் பொலிஸ்மா அதிபராக அங்கீகரிக்கப்பட்டார் என பேராசிரியர் சாவித்திரி குணசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, பொதுமக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுமாறு சட்டத்தரணிகள் கூட்டமைப்பு, ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவையை வலியுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...