காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 90 பேர் வரை உயிரிழப்பு

Date:

வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களில் குறைந்தது 90 பேர் கொல்லப்பட்டதோடு 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜபாலியா நகரில் அல்-பார்ஷ் மற்றும் அல்வான் குடியிருப்புத் தொகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாகவும் மேலும் பலரை காணவில்லை என்று வஃபா செய்தி வெளியிட்டுள்ளது.

காயமடைந்தவர்களை மீட்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் மேலும் பல உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

ஏற்கனவே நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைக்கு குழந்தைகள் உட்பட காயமடைந்தவர்கள் பலர், அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...