காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 90 பேர் வரை உயிரிழப்பு

Date:

வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களில் குறைந்தது 90 பேர் கொல்லப்பட்டதோடு 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜபாலியா நகரில் அல்-பார்ஷ் மற்றும் அல்வான் குடியிருப்புத் தொகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாகவும் மேலும் பலரை காணவில்லை என்று வஃபா செய்தி வெளியிட்டுள்ளது.

காயமடைந்தவர்களை மீட்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் மேலும் பல உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

ஏற்கனவே நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைக்கு குழந்தைகள் உட்பட காயமடைந்தவர்கள் பலர், அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...