சாகரவுக்கு எதிராக புண்ணாக்கு வாளியுடன் போராட்டம் செய்த மக்கள் போராட்ட இயக்கம்!

Date:

நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலக வளாகத்தில் இன்று மக்கள் போராட்ட இயக்கத்தின் தலைவர் சானக பண்டார உள்ளிட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு எதிராக இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் சாகர காரியவசம் வெளியிட்ட கருத்திற்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த குழுவினர் அலுவலகத்திற்குள் பிரவேசிப்பதற்கு பாதுகாப்பு பிரிவினர் சந்தர்ப்பம் வழங்காத நிலையில் வீதியிலே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் புண்ணாக்கு வாளியொன்றை கொண்டுவந்ததுடன், அதனை வீதியில் வைத்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...