இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகவும் ஊக்குவிப்பாளராகவும் இருந்தவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர்: முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம்

Date:

மருதமுனை-01 அக்பர் வீதியைச் சேர்ந்த சிரேஷ்ட  ஊடகவியலாளர் கலாபூசணம் பி.எம்.எம்.ஏ.காதர் அண்மைக்காலமாக சுகயீனமுற்றிருந்த காரணத்தினால் (18) நேற்று திங்கட்கிழமை தனது 66 ஆவது வயதில் காலமானார்.

அவரது மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் சார்பில் அதன் தலைவர் என்.எம்.அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில்,

பல இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகவும் ஊக்குவிப்பாளராகவும் இருந்துள்ள பி.எம்.எம்.ஏ. காதருடைய இழப்பு ஊடகத்துறையில் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட உறுப்பினரான மர்ஹும் பி.எம்.எம்.ஏ. காதருக்கு அவரது ஊடக ஆளுமையைப் பாராட்டி கௌரவிக்கும் முகமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அதன் வருடாந்த மாநாடு ஒன்றில் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கிக் கௌரவித்தது.

இவர் 35 வருடகாலமாக தனது ஊடகப்பயணத்தை நிறைவு செய்த நிலையில் இறையடி சேர்ந்துள்ளார். இவர், தினகரன், வீரகேசரி, விடிவெள்ளி, தமிழன், தினக்குரல், மெட்ரோ நியூஸ், நவமணி, போன்ற பத்திரிகைகளிலும் வாராந்த சஞ்சிகை மித்திரனிலும் மற்றும் மாதாந்த சஞ்சிகைகளிலும் தனது எழுத்துப்பணியைத் தொடர்ந்தார்.

அன்னார் எம்.எம்.ஹவ்லதின் அன்புக் கணவரும், ஹரீஸா, சாயிறா. றாயிஷா, சீமா, சீபா, சஜீத் அஹமட் ஆகியோரின் தந்தையுமாவார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அவருடைய மறைவையிட்டு தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கும் அதேவேளை, அவருடைய மறுமை வாழ்வுக்காக அனைவரையும் பிரார்த்திக்குமாறும் சகலரையும் கேட்டுக் கொள்கின்றது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...