விடுமுறையை கொண்டாட வெளிநாடுகளுக்குச் சென்ற 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்!!

Date:

புத்தாண்டு விடுமுறையை கழிப்பதற்காக 20க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் பலர் உறவினர்களை சந்திக்கவும், குழந்தைகளின் கல்வியை கவனிக்கவும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

வெளிநாடு சென்ற பல பாராளுமன்ற உறுப்பினர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன் நாடு திரும்ப உள்ளனர்.

இதேவேளை, நுவரெலியாவிலுள்ள சென்பதி நிவேசா பாராளுமன்ற உறுப்பினர்களின் தங்கு விடுதியின் அறைகள் இம்மாதம் 14ஆம் திகதி முதல் ஜனவரி முதலாம் திகதி வரை முழுமையாக பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதிக்குள் நூறு எம்.பி.க்கள் தங்கு விடுதியை முன்பதிவு செய்துள்ளனர்.

வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு கடந்த 13ஆம் திகதி நடைபெற்றதையடுத்து, சபாநாயகர் பாராளுமன்றத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். இதனால் எம்.பி.க்கள் அனைவருக்கும் ஒரு மாதம் வரை விடுமுறை கிடைத்துள்ளது.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...