எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக் குத்து: தென் கொரியாவில் பதற்றம்!

Date:

தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியாங் (Lee Jae-myung) மீது கத்திக் குத்துத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூசன் நகரில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மர்ம நபரொருவரால் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தாக்குதலினால் படுகாயமடைந்த எதிர்க் கட்சித்தலைவர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது நிலை தற்போது கவலைக்கிடமாகவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த தாக்குதலை மேற்கொண்ட குற்றச் சாட்டில் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வலுவான பங்கு வகித்த லீ ஜே மியாங் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...