ஹமாஸின் முக்கிய தலைவர் கொலை: உச்சம் தொடும் போர் பதற்றம்

Date:

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த டிரோன் தாக்குதலில், ஹமாஸ் குழுவின் துணை தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஹமாஸ் குழுவின் நிறுவனர்களில் ஒருவரான சலே அல் அரூரி, மேற்குக் கரையில் உள்ள குழுவிற்கு தலைமை தாங்கி வந்தார்.

இந்நிலையில், நேற்று பெய்ரூட்டில் இஸ்ரேலிய டிரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், ஹமாஸ் குழுவின் துணை தலைவர் சலே அல் அரூரி மற்றும் மூன்று பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக, இஸ்ரேலிய அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட நிலையில், இந்தத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருந்தால், அது மத்திய கிழக்கு மோதலை பெரிதுப்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், சலே அல் அரூரி மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, பலஸ்தீனத்தின் ரமல்லாவில் ஹமாஸ் அமைப்பினர் மற்றும் ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரூரி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கக் கோரி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பலஸ்தீனத்தின் அதிபர் மஹ்மோத் அப்பாஸ் உடன் நல்லுறவு கொண்டிருந்த அரூரி, போட்டி குழுக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்க முயன்று வந்தார்.

இதனிடையே, லெபனானில் உள்ள பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் குறிவைத்தால் பதிலடி கொடுக்கப்படும் ஹிஸ்புல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா உறுதியளித்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...