ஆசிய கிண்ண கால்பந்து போட்டியில் கவலையுடன் பங்கேற்கும் பலஸ்தீன அணி

Date:

கத்தாரில் நடைபெறவுள்ள ஆசியாவின் தேசிய கால்பந்து போட்டியில் பலஸ்தீன அணி, அதன் முதல் ஆட்டத்தில் ஈரானுடன் மோதவுள்ளது.

ஆசியாவின் கால்பந்து அணிகளுக்கான ஆசிய கிண்ணப் போட்டி ஜனவரி மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.

ஆனால், காஸா போரால் ஜனவரி 14ஆம் திகதி நடக்கவிருக்கும் இந்த ஆட்டத்தில் கவனம் செலுத்த பலஸ்தீன அணி சிரமப்படுகிறது.

காஸா போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் அதில் பலஸ்தீன விளையாட்டாளர்கள் சிலரின் குடும்பத்தாரும் அடங்குவர்.

“பயிற்சிகளுக்கு முன்னரும் பின்னரும் பேருந்தில் பயணம் செய்யும்போதும் ஹோட்டலில் இருக்கும்போதும் அனைவரும் செய்திகளைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர்,” என்றார் பலஸ்தீன அணியின் பயிற்றுவிப்பாளர் மக்ராம் டபூப் தெரிவிக்கிறார்.

பலஸ்தீன அணி அந்நாட்டில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தங்கள் குடும்பத்தாரை நினைத்து விளையாட்டாளர்கள் எப்போதும் கவலையுடன் இருக்கின்றனர்.

சில பாலஸ்தீன விளையாட்டாளர்களின் குடும்பத்தார் காஸாவில் சிக்கியுள்ளனர். அவர்களின் வீடுகளும் அழிந்துபோய்விட்டன.” எனவும் அவர் கூறினார்.

எனினும், நெருக்கடியான காலத்திலும் ஆசிய கிண்ணப் போட்டியின் முதல் சுற்றிலிருந்து முன்னேறி பலஸ்தீன கால்பந்துக்குப் பெருமை சேர்க்கும் எண்ணத்துடன் தனது அணி இருப்பதாக டபூப் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...