வட காஸாவுக்கான மருத்துவ உதவிகளை நிறுத்தியது உலக சுகாதார நிறுவனம்!

Date:

வடகாஸாவுக்குள் மருத்துவ உதவிகளை அனுப்பவிருந்த உலகச் சுகாதார நிறுவனம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரப்படாத காரணத்தால் அதை நிறுத்தியுள்ளது.

அந்த மருத்துவ பொருட்கள் அல்அவ்தா மருத்துவமனைக்கும், மற்றொரு மருந்தகத்திற்கும் கொண்டு செல்ல இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகாஸாவுக்குள் மருத்துவ உதவிகளைக் கொண்டு செல்ல முடியாமல் போவது இது நான்காவது முறையாகும். வடகாஸாவுக்கு உதவிகள் சென்று 12 நாட்கள் ஆகிறது.

கடுமையான வெடிகுண்டுத் தாக்குதல்கள், நடமாட்டக் கட்டுப்பாடு ஆகியவற்றுடன் தெளிவான தகவல்கள் இல்லாத காரணத்தால் ஊழியர்களின் பாதுகாப்புக் கருதி இந்த முடிவை எடுத்ததாக உலக சுகாதார நிறுவனம்  தகவல் வெளியிட்டது.

5 மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவப் பொருட்களை ஜனவரி 7ஆம் திகதி அனுப்ப திட்டமிடப்பட்டதாக நிறுவனம் தெரிவித்தது.

சரியான நேரத்திற்கு மருத்துவ உதவிகள் கிடைக்காவிட்டால் வடகாஸாவில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் செய்வது அறியாது பொதுமக்கள் கலங்கி நிற்கின்றனர்.

Popular

More like this
Related

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச்...

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று...

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...