மதீனா நகரில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி: வலுக்கும் விமர்சனங்கள்

Date:

சவூதி அரேபியாவில், இஸ்லாமியர்களின் புனித நகரமான மதீனாவுக்கு இந்திய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பயணம் மேற்கொண்டார். இது குறித்த புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

இந்நிலையில் மகளிர் விவகாரத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை புனித நகரமான நபிகள் நாயகம் பள்ளிவாசல் மற்றும் குபா மசூதி முற்றங்களில் நுழைய அனுமதித்ததற்கு சமூக வலைதளங்களில் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்திய மாடல் மற்றும் நடிகை,ஆளும் பாஜக அரசின் அமைச்சரான இவர் முஸ்லிம்கள் மீதான தீவிர விரோதப் போக்குடையவர் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஸ்மிருதி இரானியுடன் வெளியுறவு இணையமைச்சர் முரளீதரன் ஆகியோர் அரசு முறைப்பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ளனர். அங்கு ஹஜ் பயணம் தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாட்டு அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.

பிறகு, இஸ்லாமியர்களின் புனித நகரமான மதினாவுக்கும்,   ஸ்மிருதி இரானி சென்றார்.

அங்கு சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சரும், மக்கா மசூதியின் துணை ஆளுநருமான சவுத் பின் மஷால் பின் அப்துல் அஜீசுடன் ஸ்மிருதி இரானி ஆலோசனை மேற்கொண்டார்.

ஹஜ், உம்ரா பயணங்களின் போது இந்தியப் பயணிகளுக்குத் தேவையான சேவைகளை மேம்படுத்துவது குறித்தும் இரு நாடுகளின் ஒருங்கிணைப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

சவூதி  அரசு அதிகாரிகள், ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.

புகைப்படத்துடன் அவர் வெளியிட்ட பதிவில், மதினாவிற்கு வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தை மேற்கொண்டேன். அல் மஸ்ஜிதுன் நபவி மசூதி, உஹுத் மலை, இஸ்லாமிய வரலாற்றில் முதல் மசூதியான குபா மசூதிக்கும் சென்றேன்.

ஆரம்பகால இஸ்லாமிய வரலாற்றோடு பின்னிப் பிணைந்த சவூதி அதிகாரிகளின் மரியாதையுடன் இந்த இடங்களுக்கு சென்றதன் முக்கியத்துவம், நமது கலாச்சார மற்றும் ஆன்மீக ஈடுபாட்டின் ஆழத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இவ்வாறு அந்த பதிவில் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

இதனை பார்த்து, நெட்டிசன்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் பரவலான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...