துறைமுக அதிகாரசபை ஏற்பாட்டில் 50 எம்.பிகள் கப்பலில் இன்ப சுற்றுலா!

Date:

துறைமுக அதிகாரசபையின் இரண்டு சிறிய கப்பல்களில் 50க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு துறைமுகத்தில் உல்லாச சுற்றுலா ஒன்றில் ஈடுபட்டிருந்ததாக தெரிய வருகிறது.

துறைமுக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவின் வேண்டுகோளுக்கு இணங்க ஒதுக்கப்பட்ட இரண்டு கப்பல்கள் மூலம் இந்த இன்ப சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுவிற்கு உணவு மற்றும் ஏனைய பானங்கள் துறைமுக அதிகாரசபையால் வழங்கப்பட்டுள்ளன.

புத்தாண்டின் ஆரம்பத்தை முன்னிட்டு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழும்பு துறைமுக வளாகத்தில் ஒரு குறுகிய கப்பல் சுற்றுப் பயணத்தை ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதில் பங்கேற்குமாறும் துறைமுக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர விடுத்திருந்த அழைப்பு கடிதத்தின் பிரகாரம் இந்த எம்.பிகள் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

மூலம்: இணையம்

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...