நாடளாவிய ரீதியில் தாதியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Date:

அரச தாதியர் சங்கம் இன்று (17) காலை 7.00 மணி முதல் நாளை காலை 7.00 மணி வரை நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

சுகாதார அமைச்சர் மற்றும் இராஜாங்க நிதி அமைச்சர் ஆகியோருக்கு இடையில் நேற்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலில் உரிய தீர்வு முன்வைக்கப்படாத நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுதத் ஜயசிறி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பல்வேறு சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (17) காலை 6.30 மணியளவில் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு முன்வைக்கப்படாத நிலையில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என வைத்திய சேவை ஒருங்கிணைந்த முன்னணியின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...