பலஸ்தீனுக்கு தனிநாடு வேண்டும்: அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தார் இஸ்ரேல் பிரதமர்

Date:

காஸாவின் போர் முடிவுக்கு வந்த பின்னர் பலஸ்தீன தனிநாடு அமைக்கப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் வலியுறுத்தலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ, தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

வொஷிங்டனின் இந்த கோரிக்கை குறித்து தான் அமெரிக்காவிடம் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். காஸா போரில் முழுமையாக வெற்றிபெறும் வரை போர் தொடரும்.

ஹமாஸ் அமைப்பின் கிளர்ச்சியாளர்களை முற்றாக அழிப்பதும் அவர்களிடம் சிக்கியுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்பதுமே இஸ்ரேலின் இலக்கு. இதற்குப் பல மாதங்கள் சொல்லாம் எனவும் இஸ்ரேலியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

காஸா மீது இஸ்ரேல் நடத்தி இராணுவ தாக்குதல்கள் காரணமாக 25 ஆயிரம் பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காஸாவில் 85 வீதமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ள நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இஸ்‌ரேலுக்கு கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்கா உட்பட இஸ்ரேலின் பல நாடுகள் இரு நாடுகள் என்ற தீர்வை வலியுறுத்தி வருகின்றன.

எனினும் பெஞ்சமின் நெதன்யாஹூ அதற்கு இணங்கவில்லை என்பது அவரது கருத்துக்கள் மூலம் தெளிவாகியுள்ளது.

ஜோர்தான் நதிக்கு மேற்கில் உள்ள நிலப்பகுதி முழுவதும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும் என அவர் நிபந்தனை விதித்துள்ளார். அந்தப் பகுதி பாலஸ்தீனத்தையும் உள்ளடக்கிய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...