முஸ்லிம்கள் பிளவுபடுவது முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கே தீங்காக முடியும்:  உலமா சபை பொதுச்செயலாளர்

Date:

முஸ்லிம்களுக்கிடையே ஏற்படும் பிளவுகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கே தீங்காக அமைய முடியும். எனவே முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான முயற்சிகள் முஸ்லிம் சமூகத்தில் பரவலாக்கப்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பொதுச் செயலாளர் அஷ்-ஷெய்க்ஹ் அர்கம் நூரமித் தெரிவித்தார்.

அன்னாரின் இளைய மகன் அண்மையில் காலம் சென்றதற்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் ஸ்தாபகர்கள் அவரது இல்லத்துக்கு விஜயம் செய்த வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கும் நாடு, அத்துடன் ஏனைய மதங்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அனைத்து மக்களும் சமமான உரிமைகளைப் பெற்றவர்களே.

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் ஒன்றாய் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் ஸ்தாபகரும் நடப்புத் தலைவருமான அஸ்-ஸெய்யித் ஸாலிம் றிபாய் மௌலானா சார்பில் அவருடைய சகோதரர் அஸ்-ஸெய்யித் திஹாம் றிபாய் மௌலானா, ஏனைய ஸ்தாபகர்களான அஸ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி, அஷ். அப்துல் முஜீப் (கபூரி), நிர்வாக உத்தியோகத்தர் பியாஸ் முஹம்மத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...