முஸ்லிம்கள் பிளவுபடுவது முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கே தீங்காக முடியும்:  உலமா சபை பொதுச்செயலாளர்

Date:

முஸ்லிம்களுக்கிடையே ஏற்படும் பிளவுகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கே தீங்காக அமைய முடியும். எனவே முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான முயற்சிகள் முஸ்லிம் சமூகத்தில் பரவலாக்கப்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பொதுச் செயலாளர் அஷ்-ஷெய்க்ஹ் அர்கம் நூரமித் தெரிவித்தார்.

அன்னாரின் இளைய மகன் அண்மையில் காலம் சென்றதற்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் ஸ்தாபகர்கள் அவரது இல்லத்துக்கு விஜயம் செய்த வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கும் நாடு, அத்துடன் ஏனைய மதங்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அனைத்து மக்களும் சமமான உரிமைகளைப் பெற்றவர்களே.

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் ஒன்றாய் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் ஸ்தாபகரும் நடப்புத் தலைவருமான அஸ்-ஸெய்யித் ஸாலிம் றிபாய் மௌலானா சார்பில் அவருடைய சகோதரர் அஸ்-ஸெய்யித் திஹாம் றிபாய் மௌலானா, ஏனைய ஸ்தாபகர்களான அஸ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி, அஷ். அப்துல் முஜீப் (கபூரி), நிர்வாக உத்தியோகத்தர் பியாஸ் முஹம்மத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...