மருத்துவமனைக்குள் மாறு வேடத்தில் நுழைந்து 3 பாலஸ்தீனியர்களைக் கொன்ற இஸ்ரேல் இராணுவம்!

Date:

பலஸ்தீன மருத்துவமனை ஒன்றில் மாறுவேடங்களில் நுழைந்த இஸ்ரேலிய இராணுவத்தினர் அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த பலஸ்தீனியர்கள் 3 பேரைச் சுட்டுக் கொன்றனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆரம்பித்த இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் உலகையே உலக்கியுள்ளது.

தொடர்ந்து போரினால் நிகழ்ந்த கொடுமைகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், ஹமாஸ் குழுவினரை ஒழிக்க இஸ்ரேல், பலஸ்தீன காசா பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திவருகிறது.

அதன் தொடர்ச்சியாக, இஸ்ரேலிய இராணுவ படையினர் பலிஸ்தீனியர்களைத் தேடி காசாவில் மேற்கு கரை பகுதியில் உள்ள ஜெனின் நகரில் உள்ள இப்ன் சினா மருத்துவமனைக்குள் மாறுவேடங்களில் நுழைந்துள்ளனர்.

நர்சுகள், ஹிஜாப் அணிந்த பெண்கள், நோயாளிகள் போல வேடமிட்டு மருத்துவமனைக்குச் சென்ற அவர்கள் ஆடைகளுக்குள் ஆயுதங்களையும் மறைத்து எடுத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையின் மூன்றாம் தளத்திற்குச் சென்ற அவர்கள், அங்கு சிகிச்சை பெற்று வந்த பலஸ்தீனியர்கள் 3 பேரைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.

கொல்லப்பட்ட மூன்று பேரும் பலஸ்தீன இராணுவத்தின் ஜெனின் ப்ரிகேட்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் என ஹமாஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மொஹம்மெட் ஜலாம்னெஹ் என்ற முக்கிய நபரை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தியதாகவும் ஆனால், அந்த அமைப்புடன் தொடர்பு இல்லாத சகோதரர்கள் இருவரும் இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்டனர் என்றும் இஸ்ரேல் கூறுகிறது.

இந்த தாக்குதலை தொடர்ந்து ஜெனின் நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பலஸ்தீன சுகாதார துறை ஐ.நா.வின் பொதுச்சபையிடம் கோரிக்கை வைத்துள்ளது.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...