நேற்றைய ஆர்ப்பாட்டம்: அரசாங்கத்துக்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்கு

Date:

நேற்று  அரசாங்கத்துக்கு எதிராக பாரிய பேரணியொன்றை கொழும்பில்  எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்திருந்தது.

”மாற்றத்தை ஏற்படுத்தும் வருடம் – 2024” எனும் தொனிப்பொருளில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதுடன், பேரணியை நடத்துவதற்கு எதிராக மூன்று நீதிமன்ற தீர்ப்புகளும் வழங்கப்பட்டிருந்தன.

என்றாலும், நீதிமன்ற உத்தரவுகளை மீறி பேரணியை ஐக்கிய மக்கள் சக்தி நடத்தியது. கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் பொலிஸாரின் தடுப்புகளை தாண்டி பேரணி பயணிக்க முற்பட்ட போது கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டனர்.

போராட்டம் மீதான தாக்குதலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனித உரிமை வழக்கை தொடர எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பேரணியில் கலந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிகார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். இவர்களில் சிலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Popular

More like this
Related

சுற்றாடல் பிரச்சினைகளை முறையிடுவதற்கு புதிய WhatsApp இலக்கம்

சுற்றாடல் பிரச்சினைகளை சுற்றாடல் அமைச்சினால் புதிய வட்ஸ்அப் இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த...

இஸ்லாமிய வீரர்களுக்காக சில மாற்றங்களை செய்த FIFA: பீர் நிறுவனத்தின் லோகோக்கள் நீக்கம்.

தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்த விண்ணப்பம் கோரல்!

க.பொ.த சாதாரண தர 2025(2026) பரீட்சை மீள் திருத்தம் செய்வதற்கு  எதிர்வரும்...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 72வது வருடாந்த அங்கத்தவர் மாநாடு நாளை கண்டியில் ..!

கடந்த 72 வருடகாலமாக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இஸ்லாமியப் பணியில் உழைத்துவரும்...