பாதுகாப்பான வலயமாக அறிவிக்கப்பட்ட ரஃபா நகரில் தாக்குதலை நடத்தப்போகும் இஸ்ரேல்!

Date:

காசா மீதான இஸ்ரேலின் தரை மற்றும் வான்வழி தாக்குதல்களினால் இதுவரையில் 27,000 மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலினால் பாதுகாப்பான வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த ரஃபா நகரில் தாக்குதலை நடத்தப்போவதாக இஸ்ரேல் தற்போது அறிவித்துள்ளது.

“எமது இஸ்ரேல் ராணுவம் கான் யூனிஸில் பணியை முடித்த பிறகு விரைவில் ரஃபா எல்லையை அடைந்து, அதன் எல்லைப் பகுதிகளில் உள்ள ஹமாஸ் பிரிவுகளை அழிக்கும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் பயங்கரவாதக் குழுவின் போரிடும் திறனை கடுமையாக பலவீனப்படுத்தும் என்றும் கேலண்ட் கூறியுள்ளார்”.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும், இஸ்ரேலினால் நடத்தப்பட்ட தாக்குதலில் 105 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

எனினும் இஸ்ரேலினால் பாதுகாப்பான வலயமாக அறிவிக்கப்பட்ட ரஃபா நகரை நோக்கி சுமார் 1.9 மில்லியன் பலஸ்த்தீனியர்கள் இடம்பெயர்ந்தனர்.

இந்த நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் இந்த நடவடிக்கையானது தற்போது சர்வதேச நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...