தாய்நாட்டின் ஆள்புலத்துக்கு அரணாகச் செயற்படுவது அவசியம்: முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர்

Date:

நாட்டின் சுதந்திரத்தை கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் நமது முன்னோர்கள் செய்த தியாகத்தை நினைவுகூர வேண்டுமென அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் ஷாம் நவாஸ் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஏகாதிபத்தியவாதிகளின் பிடியிலிருந்து நம் நாடு மீண்டு இன்றுடன் 76 வருடங்களாகின்றன. பிரித்தானியாவின் ராஜதந்திரங்களால் நமது நாட்டு வளங்கள் மலிமாக மட்டுமன்றி சுயநலத்துக்காகவும் பாவிக்கப்பட்டது.

நாம் பெற்ற சுதந்திரம் அந்நிய கலாசாரங்களின் திணிப்பிலிருந்தும் நம்மை பாதுகாத்தது.

இன்று சகல சமூகத்தினரும் தங்களது அடையாளங்களுடன் வாழக் கிடைத்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது. எமது நாட்டின் எதிர்காலம் சுதந்திரத் தின யதார்த்தங்களை புரிந்து வாழ்வதில் தானுள்ளது.

இலங்கையில் வாழும் நாம்,ஒரு தாய் பிள்ளைகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து 76 வருடங்களுக்கு முன்னர் பெற்ற சுதந்திரத்தை பெறுமதியானதாக்குவோம்.

பிரிந்து அல்லது பிளவுபட்டு நமது தாய் நாட்டின் ஆள்புலமைக்கு ஆபத்து ஏற்படாது பாதுகாக்க இந்த நாளில் உறுதிபூணுவோம்.

நாடு பெற்ற சுதந்திரம் நம்மை வாழ வைக்கும் என்ற நம்பிக்கையில்,பணிகளை முன்னெடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...