தாய்நாட்டின் ஆள்புலத்துக்கு அரணாகச் செயற்படுவது அவசியம்: முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர்

Date:

நாட்டின் சுதந்திரத்தை கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் நமது முன்னோர்கள் செய்த தியாகத்தை நினைவுகூர வேண்டுமென அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் ஷாம் நவாஸ் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஏகாதிபத்தியவாதிகளின் பிடியிலிருந்து நம் நாடு மீண்டு இன்றுடன் 76 வருடங்களாகின்றன. பிரித்தானியாவின் ராஜதந்திரங்களால் நமது நாட்டு வளங்கள் மலிமாக மட்டுமன்றி சுயநலத்துக்காகவும் பாவிக்கப்பட்டது.

நாம் பெற்ற சுதந்திரம் அந்நிய கலாசாரங்களின் திணிப்பிலிருந்தும் நம்மை பாதுகாத்தது.

இன்று சகல சமூகத்தினரும் தங்களது அடையாளங்களுடன் வாழக் கிடைத்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது. எமது நாட்டின் எதிர்காலம் சுதந்திரத் தின யதார்த்தங்களை புரிந்து வாழ்வதில் தானுள்ளது.

இலங்கையில் வாழும் நாம்,ஒரு தாய் பிள்ளைகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து 76 வருடங்களுக்கு முன்னர் பெற்ற சுதந்திரத்தை பெறுமதியானதாக்குவோம்.

பிரிந்து அல்லது பிளவுபட்டு நமது தாய் நாட்டின் ஆள்புலமைக்கு ஆபத்து ஏற்படாது பாதுகாக்க இந்த நாளில் உறுதிபூணுவோம்.

நாடு பெற்ற சுதந்திரம் நம்மை வாழ வைக்கும் என்ற நம்பிக்கையில்,பணிகளை முன்னெடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...