“புதிய நாட்டை கட்டியெழுப்புவோம்” AYFO சமூக சேவை அமைப்பின் சுதந்திர தின நிகழ்வும் மர நடுகையும்!

Date:

-ஏ. கே. ஹஷான் அஹமட்

இலங்கை 76வது சுதந்திர தின விழா சம்மாந்துறை அஷ்ஹேரியன் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (4) சம்மாந்துறை கைகாட்டி சந்தியில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் வருகை தந்த அதிதிகளால் தேசிய கொடி ஏற்றபட்டதுடன் , ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வும் இடம்பெற்றது.

பிரதம அதிதியாக வருகை தந்திருந்த, முன்னாள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய பிரதி தலைவர் அல்-ஹாஜ் எம்.ஐ.எம்.மன்சூர் உரை ஆற்றியதோடு, கௌரவ அதிதி உரையினை கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம்.ஐ. ரனூஸ் நிகழ்த்தியதுடன், தொடர்ந்தும் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ். நளீம்  உரை யும் நிகழ்த்தினார்.

மேலும் நிகழ்வுக்கு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.நௌபர், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சரீபா, தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கலாசாலையின் தலைவர் அஷ்-ஷேய்க் இஸ்மாலெப்பை, SLMC STR இளைஞர் காங்கிரஸின் தலைவரும் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்யாலய ஆசிரியர் ஹாதிக் இப்ராஹிம், அமைப்பின் ஆலோசாகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...