இணையப் பாதுகாப்புச் சட்டம்: சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Date:

இணையப் பாதுகாப்புச் சட்டம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை மீறி நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தவறானவை என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று சபாநாயகர் அலுவலகம் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தின் பிரகாரம் சட்டமா அதிபர் திணைக்களம் உறுதிப்படுத்திய பின்னரே இணையப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் நடவடிக்கை சட்டமா அதிபர் திணைக்களம் சட்டவரைவாளர் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுக்கப்படுவதால், உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு மாறாக அல்லது அரசியலமைப்பிற்கு முரணாக செயற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் எவ்வாறான பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டன என்பதை சம்மந்தப்பட்ட உறுப்பினர்கள் தெரிவிக்கவேண்டும் என்றும் சபாநாயகர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சபாநாயகர் தனது விருப்பத்தின்படி சட்டங்களை இயற்ற முடியும் என்றும் சட்டமூலங்களில் திருத்தங்களை செய்ய முடியுமென தெரிவிக்கப்படும் கருத்துகள், அரசமைப்பு குறித்த அறிவை அவமதிப்பதாக அமைந்துள்ளதெனவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...