இஸ்ரேல் – ஹமாஸ் போர் முடிவுக்கு வருகிறதா? ஹமாஸ் அமைப்பு முன்வைத்துள்ள விடயங்கள்!

Date:

இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினரின் துப்பாக்கிகள், பீரங்கிகள், போர் விமானங்கள், ஏவுகணைகளுக்கு ஓய்வு கொடுக்கும் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது.

கடந்த நான்கு மாதங்களாக நடந்து வரும் போர் முடிவுக்கு வருகிறதோ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் ஹமாஸ் அமைப்பு முன்வைத்துள்ள விடயங்கள். முன்னதாக அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் சார்பில் மத்தியஸ்தம் செய்யும் வகையில் கத்தார், எகிப்து நாடுகள் நேரடியாக ஹமாஸ் அமைப்பினரை சந்தித்து பேசி வருகின்றனர்.

கடந்த வாரம் நடந்த பேச்சுவார்த்தையில் சில விடயங்கள் ஹமாஸ் அமைப்பினரிடம் வலியுறுத்தப்பட்டது.

இதற்கு பதில் என்னவென்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்தது. நேற்று இரவு இஸ்ரேல் வந்த அமெரிக்க செக்ரடரி ஆஃப் ஸ்டேட் ஆன்டனி பிலிங்கென், போர் குறித்து முக்கியமான விடயங்களை ஆலோசித்தது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ள பதிலில்,

மூன்று கட்டங்களாக போர் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

அதுவும் 45 நாட்கள் இடைவெளியில் மேற்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. முதல் கட்டத்தில் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து அனைத்து பலஸ்தீனிய பெண்கள், குழந்தைகள் விடுவிக்கப்பட வேண்டும்.

இதற்கு பதிலாக காஸாவில் உள்ள பெண் பணயக் கைதிகள், 19 வயதுக்கு உட்பட்டவர்கள், முதியவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை விடுவிக்கப்படுவர். இரண்டாம் கட்டத்தில் எஞ்சிய ஆண் பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவர்.

மூன்று கட்ட செயல்பாடுகள்

மூன்றாம் கட்டத்திலும் பணயக்  கைதிகள் பரிமாற்றம் நடைபெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் இறுதியில் இருதரப்பும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முன்வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர இஸ்ரேல் படைகள் முழுவதுமாக வெளியேற வேண்டும். இறந்தவர்களின் உடல்களும் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக காஸாவில் மறுகட்டமைப்பு பணிகள் தொடக்கப்படும் எனத் தெரிகிறது. இத்தகைய நடவடிக்கைகள் போரை முடிவுக்கு கொண்டு வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி போரின் தொடக்கமாக இருந்ததே ஹமாஸ் அமைப்பினர் தான் என்பதை நினைவு கூற வேண்டியுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகள் மீது நிலம், நீர், ஆகாயம் என மும்முனை தாக்குதலை ஹமாஸ் அமைப்பினர் அதிரடியாக தொடுத்தனர்.

Popular

More like this
Related

முதல் மனைவியின் சம்மதமின்றி 2வது திருமணம் செய்ய முடியாது: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரளா மாநிலத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகள் வழங்கிய உத்தரவானது பலரது...

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...