குறிவைத்து தாக்கும் இஸ்ரேல்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Date:

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துவரும் நிலையில், இஸ்ரேலானது தரைவழித் தாக்குதலை ரஃபா நகரில் நடத்தப்போவதாக அறிவித்ததிலிருந்து, காஸா மீதான குண்டுவீச்சுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகின்றது.

மத்திய காசாவில், குடியிருப்பு பகுதியில் குண்டு வெடித்ததில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் வெளியாகாத நிலையில் தான், தெற்கு கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனையைச் சுற்றி, இஸ்ரேலிய படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஸ்னைப்பர் தாக்குதல்களில் 21 பலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்தோடு மருத்துவமனையின் மேற்கூரையில் திரண்டிருந்த இளைஞர்கள் குழுவையும் தாக்க இஸ்ரேலிய ட்ரோன்கள் குறிவைத்துள்ளன. குடும்பத்தினருடன் தகவல் தொடர்பை மேற்கொள்ள முயன்ற குழுவினரே இவ்வாறு குறிவைக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களினால் இதுவரையில் காஸாவில் 27,947 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...