குறிவைத்து தாக்கும் இஸ்ரேல்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Date:

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துவரும் நிலையில், இஸ்ரேலானது தரைவழித் தாக்குதலை ரஃபா நகரில் நடத்தப்போவதாக அறிவித்ததிலிருந்து, காஸா மீதான குண்டுவீச்சுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகின்றது.

மத்திய காசாவில், குடியிருப்பு பகுதியில் குண்டு வெடித்ததில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் வெளியாகாத நிலையில் தான், தெற்கு கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனையைச் சுற்றி, இஸ்ரேலிய படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஸ்னைப்பர் தாக்குதல்களில் 21 பலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்தோடு மருத்துவமனையின் மேற்கூரையில் திரண்டிருந்த இளைஞர்கள் குழுவையும் தாக்க இஸ்ரேலிய ட்ரோன்கள் குறிவைத்துள்ளன. குடும்பத்தினருடன் தகவல் தொடர்பை மேற்கொள்ள முயன்ற குழுவினரே இவ்வாறு குறிவைக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களினால் இதுவரையில் காஸாவில் 27,947 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சிலாபம் மாவட்ட பொதுத் தள வைத்தியசாலையின் பாவனைக்காக அண்ட்ராய்ட்  இரத்த அழுத்தக்...

“இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே பலத்த கூட்டாளி டிரம்ப் மட்டுமே”: டிரம்ப் – ஈரான் ஒப்பந்தத்தை விமர்சிக்க வேண்டாம் என ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் மேற்கொண்டுள்ள சமாதான ஒப்பந்தத்தைப் பகிரங்கமாக...