நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

Date:

வரட்சி காலநிலையால் நீர் மட்டம் குறைவடைந்துள்ள நிலையில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (WSDB) களனி ஆற்றின் குறுக்கே உப்புத் தடுப்பை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

தடுப்புச்சுவர் அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே இடம்பெற்று வருவதாக பிரதி பொது முகாமையாளர் பொறியியலாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், “தற்போதைக்கு நீர் கொள்ளளவை பயன்படுத்தி நீர் விநியோகம் தொடரும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் நீர் ஆதாரங்களில் நீடித்த வரட்சியான காலநிலையின் தாக்கம் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரட்சியான காலநிலையால் “தண்ணீர் நுகர்வு அதிகரித்துள்ளது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன், நுகர்வோரை “நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...

சவூதி- பாகிஸ்தான் ஒப்பந்தம்: இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவூதி செயல்படும் என நம்புவதாக இந்தியா தெரிவிப்பு.

சவூதி மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தான...