சிரேஷ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் எழுதிய ‘வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்’ நூல் வௌியீடு

Date:

சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் எழுதிய “வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்” எனும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (25) இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன்,உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாஷிம் உமர் கலந்து கொண்டனர்.

கௌரவ அதிதிகளாக கொழும்பு பல்கலைக்கழக புவியியல் துறை தலைவி பேராசிரியை பரீனா ருசைக், அமானா வங்கி பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் மொஹமட் அஸ்மீர், சுங்கத் திணைக்கள மேலதிகப் பணிப்பாளர் சம்சுதீன் நியாஸ்,சிரேஷ்ட அறிவிப்பாளர் பஷீர் அப்துல் கையூம்,மௌலவி எம்.ஆர். அப்துர் ரஹ்மான், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம் ஜவ்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது நூலின் முதல் பிரதியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாஷிம் உமர் நூல் ஆசிரியரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

Popular

More like this
Related

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...