சிரேஷ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் எழுதிய ‘வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்’ நூல் வௌியீடு

Date:

சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் எழுதிய “வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்” எனும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (25) இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன்,உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாஷிம் உமர் கலந்து கொண்டனர்.

கௌரவ அதிதிகளாக கொழும்பு பல்கலைக்கழக புவியியல் துறை தலைவி பேராசிரியை பரீனா ருசைக், அமானா வங்கி பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் மொஹமட் அஸ்மீர், சுங்கத் திணைக்கள மேலதிகப் பணிப்பாளர் சம்சுதீன் நியாஸ்,சிரேஷ்ட அறிவிப்பாளர் பஷீர் அப்துல் கையூம்,மௌலவி எம்.ஆர். அப்துர் ரஹ்மான், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம் ஜவ்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது நூலின் முதல் பிரதியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாஷிம் உமர் நூல் ஆசிரியரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...