சிரேஷ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் எழுதிய ‘வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்’ நூல் வௌியீடு

Date:

சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் எழுதிய “வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்” எனும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (25) இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன்,உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாஷிம் உமர் கலந்து கொண்டனர்.

கௌரவ அதிதிகளாக கொழும்பு பல்கலைக்கழக புவியியல் துறை தலைவி பேராசிரியை பரீனா ருசைக், அமானா வங்கி பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் மொஹமட் அஸ்மீர், சுங்கத் திணைக்கள மேலதிகப் பணிப்பாளர் சம்சுதீன் நியாஸ்,சிரேஷ்ட அறிவிப்பாளர் பஷீர் அப்துல் கையூம்,மௌலவி எம்.ஆர். அப்துர் ரஹ்மான், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம் ஜவ்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது நூலின் முதல் பிரதியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாஷிம் உமர் நூல் ஆசிரியரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...