ஜனாதிபதி ரணிலின் ஆட்சியின் கீழ் நாட்டின் மொத்த கடன் தொகை 28இ095 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு!

Date:

இலங்கை மத்திய வங்கி வாராந்தம் வெளியிடும் பொருளாதார புள்ளிவிபரங்களுக்கு அமைய கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றத்தினால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது, அரசின் மொத்த கடன் தொகையானது 24 ஆயிரத்து 671 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் அந்த கடன் தொகையானது 28 ஆயிரத்து 95 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 15 மாத கால ஆட்சியின் கீழ் நாட்டின் மொத்த கடன் தொகையானது 3 ஆயிரத்து 424 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.

அத்துடன் கடந்த வருடத்தின் முதல் 11 மாதங்களின் வரவு செலவுத்திட்டத்தின் துண்டு விழும் தொகையானது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நவம்பர் வரையான 11 மாதத்தில் வரவு செலவுத்திட்டத்தின் துண்டு விழும் தொகையானது ஆயிரத்து 601 பில்லியன் ரூபாவாக இருந்ததுடன் கடந்த 2023 ஆம் ஆண்டின் 11 மாத காலத்தில் வரவு செலவுத்திட்டத்தின் துண்டு விழும் தொகையானது 2 ஆயிரத்து 20 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதனை தவிர வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், 5 ஆயிரம் மில்லியன் டொலர் மேலதிக கடன் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் வாராந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...