75 மில்லியன் டொலர் செலவில் சவூதி நிறுவிய கால்-கை வலிப்பு மருத்துவமனை செயற்பாடுகளை மதிப்பீடு செய்ய வந்தது SFD

Date:

இலங்கைக் குடியரசிற்கான சவூதி அரேபியத் தூதுவர் கெளரவ காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி அவர்கள்  நேற்று(27) அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் (SFD) அபிவிருத்தி மதிப்பீட்டுப் பிரிவின் பிரதிநிதிகள் குழுவை தூதரகத்தில் வரவேற்றார்.

இலங்கையின் சுகாதார அமைச்சினால் 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நடைமுறைப்படுத்தப்பட்ட கால்-கை வலிப்பு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்கள் திட்டத்தின் செயற்படுத்தலுக்குப் பின்னரான மதிப்பீட்டை மேற்கொள்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்திற்கு, வளர்ச்சிக்கான சவூதி நிதியம் 32 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கி உதவியது.

இத்திட்டம் டிசம்பர் மாதம் 2017 ஆம் ஆண்டில் இல் திறந்து வைக்கப்பட்டது. மேலும் இம்மருத்துவமனையானது 242 படுக்கைகள் கொண்ட 8 தளங்களைக் கொண்ட கட்டடத்தில் அமையப்பெற்றுள்ளது.

இது கொழும்பு தேசிய மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ளது. அதிகரித்து வரும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மூளையின் மின் ஆற்றலின் அதிகரிப்பால் ஏற்படும் வலிப்புக்கு சிகிச்சையளிப்பதற்கான சேவைகளை வழங்குகி வருகிறது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...