தற்காலிகமாக மூடப்பட்ட கோள் மண்டலம் மீண்டும் திறக்கப்படுகிறது!

Date:

பராமரிப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்ட கோள் மண்டலம், மீண்டும் இன்று (13) முதல் திறக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் அபிவிருத்தி மற்றும் புத்தாக்க பணிப்பாளர் கலாநிதி உத்பலா அலஹகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் கீழுள்ள கோள் மண்டலத்தின் புரொஜெக்டர் (Projector) உபகரணங்களின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கோள் மண்டலம் கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி முதல் நேற்று (12) வரை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து குறித்த புரொஜெக்டர்கள் புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று (13) புதன்கிழமை முதல் கோள் மண்டலத்தின் காட்சிகள் மீண்டும் ஆரம்பிப்பதற்குத் அவசியமான நடவடிக்கைகளை இலங்கை கோள் மண்டல ஊழியர்கள் முன்னெடுத்துள்ளனர்.

காட்சிகள்
பாடசாலை மாணவர்களுக்கு:
செவ்வாய் – வெள்ளி: மு.ப.10:00 – பி.ப. 2.00 மணி

பொதுமக்களுக்கு
சனிக்கிழமை : மு.ப.10:00 – பி.ப. 2.00 மணி

பாடசாலை மாணவர்களுக்கான முன்பதிவுக்கு: 011 2586 499

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...