இன்று அதிகூடிய வெப்பநிலை பதிவாகக்கூடும்!

Date:

கிழக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும், கொழும்பு, கம்பஹா, மன்னார், இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இன்று அதிகூடிய வெப்பநிலை பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

குறித்த பகுதிகளில், மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையை காட்டிலும் அதிகரித்து பதிவாகக் கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அதிகூடிய வெப்பநிலை நேற்றைய தினம் குருணாகல் மாவட்டத்தில் பதிவானது.

குறித்த மாவட்டத்தில் 38.5 பாகை செல்ஸியஸ் வெப்பநிலை நேற்று பதிவாகியுள்ளது.

மனித உடலின் சராசரி வெப்பநிலையானது 37 பாகை செல்லியஸ் ஆகும்.

எனினும், அதனை காட்டிலும் அதிகூடிய வெப்பநிலை பதிவாவதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...