புறப்பட்ட 40 நிமிடங்களின் பின் மீண்டும் தரையிறங்கிய ஸ்ரீலங்கன் விமானம்

Date:

இந்தியாவின் பெங்களூர் நோக்கி நேற்று (19) அதிகாலை பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் யு.எல். 173 என்ற விமானம் நேற்று அதிகாலை 1.10 அளவில் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

எனினும் விமானத்தின் சமநிலையை பராமரிக்கும் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 40 நிமிடங்களின் பின்னர் அது கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீண்டும் தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் ஏனைய மாற்று விமானங்களின் ஊடாக குறித்த 85 பேரும் பெங்களூர் நோக்கி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...