மனிதாபிமான உதவிகளை வழங்கி உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழும் சவூதி அரேபியா.

Date:

உலகில் எந்த அனர்த்தங்கள் நடந்தாலும் உடனே முன்னின்று மனிதாபிமான உதவிகளை வழங்கி வரும் நாடுகளில் சவூதி அரேபியா முன்னிலை வகிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை என உலக முஸ்லிம் சம்மேளத்தின் இலங்கைக்கான பிரதிநிதி தேஷபந்து இம்ரான் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

அனைத்து நாடுகளுக்கும் சவூதி அரேபியாவின் மனிதாபிமான உதவிகள் சென்றடைவது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், பலஸ்தீன் காஸா பிரச்சினை ஆரம்பித்தது முதல் பல கோடிக்கணக்கான அவசர உதவிகளை பணமாகவும் பொருட்களாகவும் மன்னர் சல்மான் நிதியத்தினூடாக வழங்கி வருகிறது.

குறிப்பாக இந்த புனித ரமழான் மாதத்தில் காஸா மக்கள் படும் கஷ்டங்கள், துன்பங்கள், உயிரிழப்புக்கள்,அவதிகள் அனைத்தையும் முன்னிட்டு மீண்டும் நாற்பது மில்லியன் அமெரிக்க டாலர்களை அவசரகால பண உதவியாக வழங்கியுள்ளது. அல்லாஹ் அந்த மக்களின் நன்கொடைகளை ஏற்றுக்கொள்வானாக.

இவ்வாறே எமது இலங்கை நாட்டிலும் பல மனிதாபிமான உதவிகளை சவூதி அரேபியா, இலங்கை சவூதி தூதரகத்தினூடாகவும், உலக முஸ்லிம் சம்மேளன சர்வேதேச நிவாரண அமைப்புக்களினூடாகவும் வழங்கி வந்துள்ளது , தொடர்ந்தும் வழங்கி வருகின்றது என்பதை நன்றியுடன் நினைவு படுத்துகிறோம்.

சவூதி அரேபியாவின் மனிதாபிமான உதவிகள் அன்பளிப்புக்கள் என்றும் தொடர வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...