தூய்மையான அரசியலை நோக்கி பயணிப்போம்: மார்ச் 12 இயக்கத்தின் இன்றைய விழிப்புணர்வு செயற்றிட்டம்

Date:

“தூய்மையான அரசியலை நோக்கி பயணிப்போம்” என்னும் நோக்கில் தேர்தலுக்காக மக்களை தயார்ப்படுத்துவதைக் இலக்காகக்கொண்டு மார்ச் 12 இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு செயற்பாடு இன்று விகாரமகா தேவி பூங்காவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறுவர், இளையோர், பெண்கள் அமைப்பினர் இணைந்து தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கிவைத்தனர்.

இத்துண்டு பிரசுரத்தில் பாரளுமன்ற, மாகாணசபை, மற்றும் உள்ளுராட்சிசபைத் தேர்தல் காலங்களில் நல்ல தலைவர்களை உருவாக்கி தெரிவுசெய்யும் பணியில் பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் கருத்தில் கொள்ள வேண்டிய 08 அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் பிரபல பேச்சாளர்களின் முக்கிய உரைகள்,
இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான எங்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் ஒரு இசை நிகழ்ச்சி, என்பனவும் இன்று மாலை இடம்பெறவுள்ளது.
மார்ச் 12 இயக்கம் – தூய்மையான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கோடு 2015ஆம் ஆண்டு சிவில் சமூக அமைப்புக்களால் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...