ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது குறித்து ஷூரா சபையின் வேண்டுகோள்

Date:

புனித ரமழான் மாதத்தில், இரவு நேரங்களில் பல பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கிகளை அதிக ஒலி எழுப்பும் வகையில் பயன்படுத்துவதனால், அண்டை வீட்டார், குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்கள், குழந்தைகள் மற்றும் நோயுற்றவர்களுக்கு அசெளகரியங்கள் ஏற்படுவதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் தேசிய ஷுரா சபை விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
தொழுகைக்கான அழைப்பு தவிர அனைத்து நிகழ்ச்சிகளிலும் பள்ளிவாயில்களுக்கு சமூகம் தந்திருப்பர்களுக்கு மட்டுமே ஒலி கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
ஒலி மாசுபாட்டின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, ஒலிபெருக்கிகளால் ஏற்படும் இடையூறுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறவர் தம் அண்டை வீட்டாரைத் தொந்தரவு செய்ய வேண்டாம். (புகாரி & முஸ்லிம்)
எனவே, இரவுத் வணக்கங்களின் போது அண்டை வீட்டாருக்கு இடையூறு ஏற்படாத வகையில் வெளிப்புற ஒலிபெருக்கிகளை பயன்படுத்துமாறு தேசிய ஷூரா சபை அனைத்து முஸ்லிம்களையும் வேண்டிக்கொள்கிறது.
நமது நோன்பு, பிரார்த்தனை மற்றும் நற்செயல்களை வல்லவன் அல்லாஹ் ஏற்றுக்கொண்டு அவனுடைய ஏராளமான கருணைகளை எங்களுக்கு வழங்கவும், இந்த புனிதமான மாதத்தில் எங்கள் எல்லா பாவங்களையும் மன்னிக்கவும் தேசிய ஷூரா சபை பிரார்த்திப்பதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...