போலி மருத்துவர்கள் மற்றும் போலி மருத்துவ நிலையங்கள் தொடர்பாக அவசர விசாரணை..!

Date:

போலி மருத்துவர்கள் மற்றும் போலி மருத்துவ நிலையங்கள் தொடர்பாக அவசரமாக விசாரணை நடத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய இந் நடவடிக்கையை எடுத்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மருத்துவ சபையில் மருத்துவர்கள் பதிவு செய்திருக்க வேண்டுமென்பதுடன், மாகாண மட்டத்தில் தனியார் மருத்துவ நிறுவனங்கள் பதிவு செய்தல் கட்டாயமாகும்.

ஆயினும் நாடளாவிய ரீதியில் பதிவு செய்யப்படாத பல மருத்துவர்களும் மருத்துவ நிறுவனங்களும் இருப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

இவ்வாறான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களை தேடிக் கண்டுபிடித்து விசாரணை நடத்த மாகாண மற்றும் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பணித்த சுகாதார அமைச்சு, போலி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தது.

போலி மருத்துவர்கள் தொடர்பாக தம்மிடம் தகவல் வழங்க முடியுமென்றும் பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...