சர்வதேச அல்-குத்ஸ் தினத்தை முன்னிட்டு இன்று புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

Date:

கடந்த 45 வருடங்களாக  அனுஷ்டிக்கப்பட்டு வரும் “பைத்துல் முகத்தஸ்” தினம் ரமழானின் இறுதி வெள்ளிக்கிழமையான இன்று (05)  புத்தளத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

புத்தளம் முஹியத்தீன் ஜூம்ஆ பெரிய பள்ளியில் ஜும்ஆ தொழுகை நிறைவடைந்ததும் இந்நிகழ்வு ஆரம்பமானது.

இதன்போது பலஸ்தீனுக்கு ஆதரவாக பொது மக்கள் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம்.இல்யாஸ் இந்நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.

சமூக ஆர்வலர் இப்லால் அமீன், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஜௌபர் மரிக்கார் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் இவ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

பெருமளவிலான பொலிஸார் பெரிய பள்ளிக்கு முன்பாக குவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆர்ப்பாட்ட பேரணிக்கும் ஒலி பெருக்கி பாவனைக்கும் பொலிஸார் தடை விதித்திருந்தனர்.

இறுதியாக டாக்டர் ஐ.எம்.இல்யாஸ், இப்லால் அமீன் ஆகியோரது உணர்வு பூர்வமாக உரையினை தொடர்ந்து அமைதியான இந்த ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...