ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவரானார் நிமல் சிறிபால!

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மன்றக்கல்லூரியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அவசர குழுகூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றது.

கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் பங்கேற்றிருந்தார்.

கட்சியின் தலைவராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைமை பதவியை வகிப்பதற்கு கொழும்பு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு விதித்திருந்தது.

இதனையடுத்தே, கட்சியின் அரசியல்குழு கூட்டம் அவசரமாக கூடப்பட்டு நிமல் சிறிபால டி சில்வா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீள கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கூறி வருகின்றார்.

மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளிலும் அவர் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

அதேவேளை, நீதிமன்றத்தில் தமது தரப்பு நியாயங்களை முன்வைத்து மீண்டும் கட்சி தலைவர் பொறுப்பை ஏற்பேன் என மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...