விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குளிக்கச்சென்ற திஹாரிய தம்பதிகள் உயிரிழப்பு!

Date:

கண்டி – தெல்தெனிய, கும்புக்கந்துர பகுதி, விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த பெண் ஆயிஷா – வயது 22, ஆண் தில்ஷாத் – வயது 28 எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தம்பதியை காப்பாற்றுவதற்காக நீர்த்தேக்கத்தில் குதித்த திகனை – அளுத்வெல்ல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திஹாரிய, ஜயவர்தனபுர பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான தம்பதியினரே, இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள பெண்ணின் கிராமத்திற்குச் சென்ற போது, கும்புக்கந்துர பிரதேசத்தில் இருந்து விக்டோரியா நீர்த்தேக்கத்தில் உள்ள “மோல் கல்” என்ற இடத்திற்கு இவர்கள் இருவரும் (15) திங்கட்கிழமை நண்பகல் நீராடச் சென்றுள்ளனர்.

 

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...