துருக்கி ஜனாதிபதி- ஹமாஸ் தலைவர் சந்திப்பு: பல மணி நேரம் பேச்சுவார்த்தை

Date:

காசாவில் இஸ்ரேலின் போருக்கு மத்தியில் ஹமாஸ் தலைவர் இஸ்மையில் ஹனியா துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் அர்தூகானுடன் இஸ்தான்புல் நகரில் பல மணி நேர பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தார்.

இதன்போது  பலஸ்தீனர்களுக்கு இடையிலான ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்.

‘இந்த செயற்பாட்டில் பலஸ்தீனர்கள் ஒற்றுமையுடன் செயற்படுவது முக்கியமானதாகும்.

வெற்றிக்கான பாதை மற்றும் இஸ்ரேலுக்கு வலுவான பதில் கொடுப்பது ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிலேயே தங்கியுள்ளது’ என்று எர்துவான் குறிப்பிட்டார்.

காசா மீதான இஸ்ரேலின் படையெடுப்பை துருக்கி தொடர்ந்து கடுமையாக சாடி வருகிறது.

இந்நிலையில் கடந்த 2011 தொடக்கம் துருக்கியில் ஹமாஸ் அலுவலகம் ஒன்றை நடத்தி வருவதோடு ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் அங்கு அடிக்கடி பயணித்து வருகிறார்.

‘தையிப் அர்தூகானாகிய நான் மாத்திரமே இருந்தாலும் கூட, இறைவன் எனக்கு ஆயுளைத் தந்திருக்கும் வரையில் பலஸ்தீன போராட்டத்தை பாதுகாப்பதற்கும் ஒடுக்கப்பட்ட பலஸ்தீனர்களின் குரலாகவும் நான் தொடர்ந்து செயற்படுவேன்’ என்று அர்தூகான் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.

 

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...