சஜித்-அனுர விவாதம்: விவாத திகதியை நிராகரித்த சஜித்: புதிய திகதி அறிவிப்பு

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடனான விவாதத்திற்கு தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ள திகதி குறித்து ஐக்கிய மக்கள் சக்தி பதிலளித்துள்ளது.

அடுத்த மாதம் 7, 9, 13 மற்றும் 14ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்த தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளதென நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது.

இந்நிலையில், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தலைவர்களுக்கு இடையிலான இரண்டு விவாதங்களுக்கும் தாம் தயார் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாசவும் நேற்றைய தினமே பதிலளித்திருந்தார்.

தேசிய மக்கள் சக்திக்கு பதிலளித்திருந்த ஐக்கிய மக்கள் சக்தி, இரு கட்சிகளின் பொருளாதார கலந்துரையாடல்களுக்கு முன்னர் பொது விவாதம் ஒன்றையும் முன்மொழிந்துள்ளது.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு பொது விவாதங்களுக்கான திகதிகளாக எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளை பரிந்துரைத்துள்ளது.

இதற்கமைய தேசிய மக்கள் சக்தி அறிவித்த திகதிகளுடன் குறித்த தினங்கள் பொருந்தாதுள்ளன.

இரு கட்சித் தலைவர்களுக்கிடையிலான விவாதத்திற்கு மாத்திரமே திகதிகள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி, பொருளாதார வல்லுநர்களுக்கிடையிலான விவாதத்திற்கு திகதிகள் முன்மொழியப்படாமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...