சஜித்-அனுர விவாதம்: விவாத திகதியை நிராகரித்த சஜித்: புதிய திகதி அறிவிப்பு

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடனான விவாதத்திற்கு தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ள திகதி குறித்து ஐக்கிய மக்கள் சக்தி பதிலளித்துள்ளது.

அடுத்த மாதம் 7, 9, 13 மற்றும் 14ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்த தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளதென நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது.

இந்நிலையில், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தலைவர்களுக்கு இடையிலான இரண்டு விவாதங்களுக்கும் தாம் தயார் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாசவும் நேற்றைய தினமே பதிலளித்திருந்தார்.

தேசிய மக்கள் சக்திக்கு பதிலளித்திருந்த ஐக்கிய மக்கள் சக்தி, இரு கட்சிகளின் பொருளாதார கலந்துரையாடல்களுக்கு முன்னர் பொது விவாதம் ஒன்றையும் முன்மொழிந்துள்ளது.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு பொது விவாதங்களுக்கான திகதிகளாக எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளை பரிந்துரைத்துள்ளது.

இதற்கமைய தேசிய மக்கள் சக்தி அறிவித்த திகதிகளுடன் குறித்த தினங்கள் பொருந்தாதுள்ளன.

இரு கட்சித் தலைவர்களுக்கிடையிலான விவாதத்திற்கு மாத்திரமே திகதிகள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி, பொருளாதார வல்லுநர்களுக்கிடையிலான விவாதத்திற்கு திகதிகள் முன்மொழியப்படாமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...