ஈரான் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கொழும்பில் பல பாகங்களில் வரவேற்பு பதாகைகள்

Date:

அமெரிக்காவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், ஊவா மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பதற்கு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கை வந்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கொழும்பில் பல பாகங்களிலும் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

‘அன்புடன் வரவேற்கிறோம், இப்ராஹிம் ரைசி மத்திய கிழக்கின் சிங்கம், இலங்கைக்கான உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை நிறைவு செய்தமைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம், என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஐ. ஏ. கலீலுர் ரஹ்மான், எம்.காதர், எம்.முசம்மில் போன்றோர்களினால் இந்த வரவேற்பு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்துவைக்கப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.

514 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் ஈரான் அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் 2011 ஆம் ஆண்டு உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

Popular

More like this
Related

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...