ஈரான் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கொழும்பில் பல பாகங்களில் வரவேற்பு பதாகைகள்

Date:

அமெரிக்காவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், ஊவா மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பதற்கு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கை வந்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கொழும்பில் பல பாகங்களிலும் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

‘அன்புடன் வரவேற்கிறோம், இப்ராஹிம் ரைசி மத்திய கிழக்கின் சிங்கம், இலங்கைக்கான உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை நிறைவு செய்தமைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம், என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஐ. ஏ. கலீலுர் ரஹ்மான், எம்.காதர், எம்.முசம்மில் போன்றோர்களினால் இந்த வரவேற்பு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்துவைக்கப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.

514 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் ஈரான் அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் 2011 ஆம் ஆண்டு உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...