ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு!

Date:

ஆளும் கட்சியின் உறுப்பினர் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று  இடம்பெற்றுள்ளது

அங்கு அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டம், அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்துதல் மற்றும் சகல தொகுதிகளுக்கும் அபிவிருத்தி திட்டங்களை தயாரித்தல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் தேர்தல்களில் அரசியல் கட்சிகள் எடுக்கும் தீர்மானங்கள் மற்றும் குறிப்பிட்ட இணக்கப்பாடுகளை எட்டுவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...