2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் மேலதிக வகுப்புகள், விசேட கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் என்பன இன்று நள்ளிரவு 12 மணி முதல் நிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விதிகளை மீறி மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.