காசா ஊடகவியலாளர்களுக்கு யுனெஸ்கோ சுதந்திர ஊடக விருது

Date:

யுனெஸ்கோ அமைப்பு தனது 2024 ஆம் ஆண்டுக்கான ஊடக சுதந்திர விருதை  காசா  ஊடகவியலாளர்களுக்கு வழங்கியுள்ளது.

தற்போது நிலவும் போரில் செய்தி சேகரிப்பதற்கு அவர்கள் காண்பிக்கும் தைரியம் மற்றும் அர்ப்பணிப்புக்காக கௌரவிக்கப்படுவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டது.

பெரும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தொடர்ந்து செய்தி அறிக்கையிடும் இந்த ஊடகவியலாளர்கள் அங்கீகரிக்கப்படுவதாக இந்த விருதுக்கான நடுவர் மன்றத்தின் தலைவர் மோரிசியோ வைபல் சுட்டிக்காட்டியுள்ளார்.

காசா போர் வெடித்தது தொடக்கம் இதுவரை குறைந்தது 97 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு அவர்களில் 92 பேர் பலஸ்தீனர்கள் என்று நியூயோர்க்கை தளமாகக் கொண்ட ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.

கடினமான மற்றும் அபாயகரமான சூழலில் அவர்களின் தைரியத்தை யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் ஒட்ரி அசுலாய் பாராட்டியுள்ளார்.

உலக ஊடக சுதந்திர தினத்தை ஒட்டி பலஸ்தீன கைதிகள் அமைப்பு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், இஸ்ரேலிய படைகளால் தொடர்ந்தும் 53 பலஸ்தீனர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

ஒக்டோபர் முதல் காசாபோரில் 100 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத் பணியார்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இந்த எண்ணிக்கையை விட 140 க்கும் அதிகமானதாகக் இருக்கும் என காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...