சிலந்தி,தேள் மாதிரிகளை கடத்த முயன்ற அமெரிக்க அருங்காட்சியகக் கண்காணிப்பாளர் இஸ்தான்புல் விமான நிலையத்தில் கைது !

Date:

துருக்கி இஸ்தான்புல்லில் நூற்றுக்கணக்கான விஷ சிலந்திகள் மற்றும் தேள்களை நாட்டிலிருந்து கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபரை துருக்கி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நியூயார்க்கின் அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் கண்காணிப்பாளரான குறித்த சந்தேக நபர் இஸ்தான்புல் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இவர் கடத்த இருந்த 1,500 விஷத் தேள்கள் மற்றும் சிலந்திகள் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத மருந்து திரவங்களைக் கொண்ட டசன் கணக்கான பிளாஸ்டிக் போத்தல்களைக் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த திரவமானது தேள் விஷத்தில் இருந்து பெறப்பட்ட மிகவும் மதிப்புமிக்க மருந்து என்று அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளதுடன் இது லிட்டருக்கு 10 மில்லியன் டொலர் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

துருக்கி நாட்டின் சட்டங்களுக்கு அமைய இத்தகைய உள்ளூர் இனங்களை ஏற்றுமதி செய்வது தடை  செய்யப்பட்டுள்ளன.

தேசிய வனவிலங்கு கடத்தல் விதிமுறைகளை மீறியதாகவும் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களை அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற குற்றச்சாட்டின் பேரில்  இவர் துருக்கி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...