ஈரான் ஜனாதிபதி பலி: உலகம் பாதுகாப்பானதாக மாறும்; அமெரிக்க அதிகாரியின் சர்ச்சைக் கருத்து!

Date:

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்துவிட்டால், உலகம் பாதுகாப்பான மற்றும் சிறந்த இடமாக இருக்கும் என புளோரிடாவின் அமெரிக்க செனட்டர் றிக் ஸ்கொற் (Rick Scott) தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் பலி ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் நீண்ட காலமாக பகை இருந்தது வருகின்றது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது.

இந்நிலையிலேயே, ஹெலிகாப்டர் விபத்தில் பலி ஈரான் ஜனாதிபதி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து றிக் ஸ்கொற் தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஈரான் ஜனாதிபதி ஒரு கொடுங்கோலன், அவர் நேசிக்கப்படவில்லை அல்லது மதிக்கப்படவில்லை.

அவர் உயிரிழந்துவிட்டால், கொலைகார சர்வாதிகாரிகளிடமிருந்து தங்கள் நாட்டை மீட்டெடுக்க ஈரானிய மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...